Tuesday, August 16, 2016

பிலிபைன்ஸ்


பிலிபைன்ஸ் கடந்த சில வாரங்களாக சர்வதேச அரங்கில் அதிகளவில் பேசப்பட்ட தலைப்பாகும். குறிப்பாக தென் சீனக்கடற்பரப்பு தொடர்பிலான சர்வதேச நீதிமன்றத்தினால் வழங்கப்பட்ட தீர்ப்பு இதற்கான காரணமாகும். இதனை விடவும் மிகவும் முக்கியமாக பிலிபைன்ஸ் அரசாங்கம் மற்றும் அந்நாட்டு முஸ்லிம் கிளர்ச்சிக் குழுவிற்குமிடையிலான சமாதானப்பேச்சுவார்தை மீள ஆரம்பிக்கப்பட்டுள்ளமையாகும்.
அரசாங்கம் மற்றும் கிளர்ச்சி குழுவிற்கிடையிலான பேச்சுவார்த்தை மலேசியாவில் இவ்வாரம் நடைப்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இது குறித்து கருத்து வெளியிட்டுள்ள அந்நாட்டு ஜனாதிபதியின் சமாதான முன்னெடுப்பாளர் அவர்கள் பிரச்சினைகளை தீர்ப்பதற்கான செயற்பாடுகளை முன்னெடுப்பார்கள். எனினும் அது மிகவும் கடினமானது என்று தனது கருத்தினை வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்து. மேலும் அவர் குறிப்பிடும் போது சமாதான செயற்பாடுகளில் இப்பேச்சுவார்த்தை ஒரு மைல் கல்லாகும் என்றார்

பிலிபைன்ஸ்ஸின் வரலாற்றினை பொருத்தமட்டில், தென்பகுதியானது தொடர்ச்சியான வன்முறைகளை சந்தித்து வந்துள்ளது எனலாம். குறிப்பாக முஸ்லிம் பிரிவினைவாதிகள,; மாக்ஸ்வாதிகள், குற்றவியல் அமைப்புக்கள் மற்றும் கலேன் போராளிகள் என பல பிரிவினரின் செல்வாக்கு இப்பகுதியில் காணப்படுகின்றது. இப்பிரச்சினைகள் பெரும்பாலும் மத்திய Mindanao பகுதியிலுள்ள basilan மற்றும் jolo ஆகிய பகுதிகளிலே இடம்பெறுகின்றது.

ஸ்பெயினின் காலநித்துவ நாடான பிலிபைன்ஸினை பொறுத்தமட்டில், முஸ்லீம்கள் குறிப்பிடத்தக்களவு வாழ்கின்ற பகுதியாக Mindanao காணப்படுகின்றது. குறிப்பாக 1968ல் முஸ்லீம் இராணுவ வீரர்கள் இனப்படுக்கொலை செய்யப்பட்டமையினை தொடர்ந்து Jabiadh masscare  , 1970ல் moro national liberation front (mnlf)  எனும் அமைப்பு உருவாக்கப்பட்டது பிலிபைன்ஸ் முஸ்லிம்களுக்கு சுதந்திரம் மற்றும் தனி அலகு என்பவற்றினை அடிப்படையாகக்கொண்டு உருவாக்கப்பட்டது.

1976ல் திரிப்போலியில் mnlf மற்றும் marco நிர்வாகத்திற்குமிடையில் கைச்சாத்திடப்பட்ட உடன்படிக்கையின் படி  mnlf  சுதந்திரம் என்பதிலிருந்து விலகி சுயாட்சியனை கோரியது. 1984ல்  mnlf  லிருந்து The Moro Islamic liberation front (milf)  விலகி தனியாக செயற்படத்தொடங்கியது. இதன்பின்னர் mnlf மற்றும் அரசாங்கத்திற்கிடையில் நடைப்பெற்ற பேச்சுவார்த்தையின் பிரகாரம் Mindanao, Basilan, Sulu, Tawi Tawi and Palawan  ஆகிய பகுதிகளில் சுயாட்சி வழங்குவது தொடர்பிலான ஜனநாயக பேச்சுவார்த்தைகளில் உடன்பாடு ஈட்டப்பட்டது. 
1990ல் பிலிபைன்ஸ் அரசாங்கம் Autonomous Region in Muslim Mindanao ARMM  எனும் நிர்வாக அலகினை உருவாக்கியதுடன் அதனை mnlf மற்றும் milf ஆகிய இருதரப்பினரும் ஏற்றுக்கொள்ளவில்லை.

1991ல mnlf;லிருந்து பிரிந்து Abu Sayyaf  எனும் அமைப்பு உருவாக்கப்பட்டது. இவ்வமைப்பு ஏனைய இரு அமைப்புக்களை விடவும் தீவிரமான செயற்பாடுகளை மேற்கொண்டதாக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்ட்டதுடன், பிற்பாடு அமெரிக்கா இதனை பயங்கரவாத அமைப்புக்களின் பட்டியலில் சேர்க்கவும் தவரவில்லை.

1996ல் Autonomous Region in Muslim Mindanao ARM தொடர்பில் அரசாங்கம் மற்றும்  இடையிலான அடெக்  உடன்பாடு கைச்சாத்திடப்பட்டதுடன், அப்பகுதியின் ஆளுனராகவும் அவ்வமைப்பின் தலைவர் Nur Misuari  நியமிக்கப்பட்டார். 1997ல் milf மற்றும் அரசாங்கத்திற்கு இடையிலாக மோதல் தொடங்கியதுடன் 2000ம் ஆண்டு milf யின் பெரிய இராணுவத்தளம் arm forces of the Philippines AFP  யினால் தாக்கப்பட்டதுடன் சுமார் 100,000 மக்களையும் அத்தாக்குதல் இடம்பெயரச்செய்தது. இவ்வாறு  தொடர்ந்து தாக்குதல்கள் நடைப்பெறுவதும் மீண்டும் சமாதானப்பேச்சுவார்த்தைகள் தொடர்வதுமாக பிலிபைன்ஸிலுள்ளது.

Wednesday, August 10, 2016

யெமன்

யெமன்

ஐ.நாவினால் முன்வைக்கப்பட்ட சமாதான உடன்படிக்கையினை யெமன் அரசாங்கம் ஏற்பதாக அறிவித்துள்ளபோதிலும், கிளர்ச்சிக்குழுக்களினால் அது தொடர்பிலான எந்தவொரு கருத்தும் இதுவரையில் முன்வைக்கப்படவில்லை. சவூதி சார்பான யெமன் அரசினால் ரியாத்தில் முன்னெடுக்கப்பட்ட மாநாட்டில் இவ்வுடன்படிக்கை ஏற்றுக்கொள்ளப்பட்டது. இதுதொடர்பில் செய்தியினை வெளியிட்டுள்ள சபா செய்தி நிறுவனம் ‘ மாநாட்டில் ஐக்கியநாடுகள் சபையானது ஆயுதமோதலினை முடிவுக்கு கொண்டுவருதல் மற்றும் சனா,டஸாஸ், அல்ஹ{தாயாத் பகுதிகளிலிருந்து கிளர்ச்சியாளர்கள் பின்வாங்கப்படவேண்டும் என்ற கோரிக்கையும் முன்வைக்கப்பட்டது. எனினும் ஹ_தி அமைப்பானது இக்கோரிக்கையினை ஏற்கமறுத்தமை குறிப்பிடத்தகது.

இவ்வாறான பின்ணனியில் யெமனில் நடைப்பெறுகின்ற உள்நாட்டு ஆயுதப்பேராட்டம் ஒரு முரண்பட்ட நிலைமையினை தோற்றுவித்துள்ளமையினை அவதானிக்கமுடியுமாகின்றது. மத்திய கிழக்கு பிராந்தியத்தில் சிரியா உள்நாட்டு போர் தொடர்பில் அதிகளவில் செய்திகளை வெளியிடுகின்ற ஊடகங்கள்  யெமன் ஆயுதப்போராட்டம் தொடர்பில் மௌனம் சாதிப்பதாகவே எண்ண வேண்டியுள்ளது.

யெமனின் வரலாற்றினை பொறுத்தமட்டில் உஸ்மானிய சாம்ராஜியத்தின் கீழ் ஆரம்பத்தில் இருந்த நாடு 1967ல் யெமன் மக்கள் குடியரசாக, சவூதி அரேபியாவின் ஆதரவுடன் ஸ்தாபிக்கப்ட்டது.1969ல் மாக்ஸ்வாதிகளினால் தென் பகுதியினது அதிகாரம் கைப்பற்றப்பட்டதுடன், யெமன் மக்கள் ஜனநாயக குடியரசு எனப்பெயரிட்டதுடன், மொஸ்கோ சார் அரசியல்,பொருளாதார மற்றும் வெளிவிவகார உறவுகளை பேணத்தொடங்கியது. கொள்கை மற்றும் கருத்து வேறுபாடு காரணமாக ஆயிரக்கணக்கானோர் வடக்கினை நோக்கி இடம்பெயறத்தொடங்கினர்.




இரு யெமன்களுக்குமிடையில் யுத்தம் ஏற்பட்டதுடன் அரபுலீக்கின் தலையீட்டால் அவ்வப்போது யுத்தநிறுத்தமும் அமுலில் இருந்தது. 1979ல் ஆட்சிக்கு வந்த அலி அப்துல் சலாஹ் வடயெமனின் ஜனாதிபதியாக தெரிவுசெய்யப்படதுடன் 1990 மே மாதாம் இரு யெமன்களும் ஒன்றிணைக்பபட்டு யெமன் குடியரசு எனப்பெயரிடப்பட்து.எனினும் தென்பகுதியானது பொருளாதாரம் மற்றும் அரசியலில் சனாவினால் புறக்கணிக்கபட்டமையினால் 1994 மீண்டும் மோதல் ஏற்படத்தொடங்கியது


யெமனில் தற்போதைய ஆயுதப்போராட்டம் ஜனாதிபதி மன்சூர் ஹதி மற்றும் ~pயா பிரிவின் சாதி மரபினை பின்பற்றும் ஹ_திகளுக்கு இடையில் பிரதானமாக ஏற்பட்டுள்ளது. மன்சூர் ஹதியிற்கு தென்பகுதி சுன்னிகளினது ஆதரவுள்ளதுடன் சவூதி அரேபியாவின் கூட்டணயின் கீழ் 5 வளைகுடா நர்டுகளும், ஜேரர்டான்,எகிப்து,மொரோகோ மற்றும் சூடான் போன்ற நாடுகளது ஆதரவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது. ஹ_திகளுக்கு ஈரானின் உதவிகளும் ஆலோசனைகளும் வழங்கப்படுவதுடன், இப்போராட்டமானது ஈரான் மற்றும் சவூதிக்கிடையிலான பிராந்திய பலம் தொடர்பிலான பலப்பரீட்சையாகவே பார்க்கப்படுகின்றது. யெமனின் அமைவிடமானது எண்ணெய் போக்குவரத்தின் முக்கிய இடமாக விளங்குகின்றதுடன் இதனூடாகவே செங்கடல் மற்றும் ஏடன் வளைக்குடாவினூடாக மேற்கொள்ளப்படுகின்ற எண்ணெய் போக்குவரத்து இடம்பெறுவதால், எகிப்து மற்றும் சவூதியினை பொருத்தமட்டில் இப்பகுதியினை ஹ_திகளிடமிருந்து பாதுகாக்கவேண்டிய அவசியம் உள்ளது.


பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகள் மற்றும் பிராந்திய நலன் போன்ற விடயங்களின் கீழ் அமெரிக்கா 2000ம் ஆண்டு முதல் அரசுக்கான உதவிகளை வழங்கிவருவதுடன், 2000ம் ஆண்டு யெமனில் தரித்து வைக்கப்பட்ட அமெரிக்காவின் யுத்த கப்பலான  United States Navy guided-missile destroyer USS Cole (DDG-67) அல்கைதா அமைப்பினரால் தாக்கப்பட்டத்தினை தொடர்ந்து யெமனிற்கான இராணுவ மற்றும் பொலீஸ்களுக்கான உதவிகளை வழங்க தொடங்கியது.
இதேவேளை அல் கைதாவின் கிளையான AQAP யானது தனது சொல்வாக்கினை இங்கு செலுத்தியுள்ளமை முக்கியமான விடயமாகும். அமெரிக்கா ஜனாதிபதி மன்சூர் ஹதியின் ஆதரவுடன் யுஞயுP யிற்கு எதிரான தாக்குதல்களை மேற்கொள்கின்ற அதேவேலை, AQAPயினை பொறுத்தமட்டில் ஹ_திகளுக்கும் எதிராகவும் தனது செயற்பாடுகளை மேற்கொள்கின்றமை குறிப்பிட்டத்தக்கது

தற்போதைய பிரச்சினையினை பொருத்தமட்டில், ஹ_திகள் அதிகாரத்தினை கைப்பற்றியதுடன், ஜனவரியில் பாராளமன்றத்தினை கலைப்பதாக அறிவித்ததுடன், புதிய இடைக்கால சபை மற்றும் 5 பேர் கொண்ட ஜனாதிபதி சபையினை உருவாக்கி அதனூடாக நாட்டினை இரண்டுவருடங்கள் ஆட்சிசெய்வதாகவும் குறிப்பிட்டனர். எனினும் ஹ_திகளை பொருத்தமட்டில் வடபகுதியினை சேர்ந்த சிறுபான்மையின ~pயாக்கள் என்பதால் அவர்களது பிரகடனம் சுன்னி பிரிவினர்களினாலும், தென்பகுதி தலைவர்களினாலும் புறக்கணிக்கப்பட்டதுடன், குழப்பத்தினை மேலும் அதிகரிக்கச்செய்தது.மேலும் சர்வதேச நாணயநிதியத்தின் தலையீட்டின் காரணமாக மன்சூர் ஹதியின் அரசாங்கம் 2014ல் எரிபொருளுக்கான உதவித்தொகையினை நிறுத்திககொண்டது. இதனை தனக்கு சாதகமாக பயன்படுத்திய ஹ_தி அமைப்பானது, ஐக்கிய நாடுகளினது நிலைமாற்றல் செயற்பாடுகளுக்கு எதிர்ப்பினை வெளியிட்டதுடன், எரிபொருட்களுக்கான விலையினை குறைத்தல் மற்றும் புதிய அரசாங்கம் ஆகிய கோரிக்கைகளை முன்வைத்து போராட்டங்களை மேற்கொள்ளத்தொடங்கியது. இவர்களுடன் முஸ்லிம் சகோதரத்துவ அமைப்பின் இணையமைப்பான அல் இஸ்லாவும் கலந்துக்கொண்டனர். ஏடனை ஹ_தி அமைப்பானது கைப்பற்றியதுடன் சவூதியினை மன்சூர் ஹதி நோக்கி தப்பிச்சென்றதுடன், சவுதி அரசு இராணுவரீதியில் வான்வழி தாக்குதல்களை மேற்கொண்டு மன்சூர் ஹதியின் ஆட்சியினை மீள ஏற்படுத்த முயற்சியினை மேற்ககொண்டது
.
ஹ_திகளை பொறுத்தமட்டில் ~யா மதப்பிரிவின் ~hதிஸம் எனும் கொள்கையினை பின்பற்றியவர்கள். இவர்கள் மொத்த சனத்தொகையில் மூன்றிலொரு பகுதியனராகவும், இமாமத் கொள்கையின் படி 1000வருடங்கள், 1962 வரையில் வடயெமனில் ஆட்சியினை மேற்கொண்டிருந்தனர். இவர்கள் தமக்கான பெயரினை ~hதி பிரிவினரின் மத மற்றும் கலாசார உரிமைகளினை வென்றெடுக்க பேராடியவரும், 2004ல் அவர்களது முக்கிய மாநிலமான சதாவில் தன்னாட்சியினை ஏற்படுத்தியவருமான பதர் அல் தீன் அல் ஹ_தியின் பெயரலிருந்து பெற்றுக்கொண்டனர். 2004ல் ஹ_தி கொல்லப்பட்டதுடன், அவரினது குடும்பத்தினர்கள் கைது செய்யப்பட்டமையினால் 5 கலவரங்கள் 2010ல் சமாதான உடன்படிக்கை கைச்சாத்திடும் வரையில் நிகழ்ந்துள்ளது.
மத்தியகிழக்கிலுள்ள வறுமைமிக்க நாடான யெமனில் ஏற்பட்டுள்ள மோதல் காரணமாக இதுவரையில் 2.4 மில்லியன் மக்கள் இடம்பெயர்ந்துள்ளதாகவும், 21.2 மில்லியன் மக்கள் மனிதாபிமான உதவிகளை எதிர்பார்ப்பதாகவும்,7.4மில்லியன் மக்களுக்காக உணவுத்தேவையினை பூர்த்திசெய்ய முடியாதா நிலைமை ஏற்பட்டுள்ளதாகவும் சர்வதேச நிறுவனங்களின் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதேவேளை குவைத்தில் நடைப்பெறுகின்ற பேச்சுவார்த்தைகளில் உடன்பாட்டுக்கு எதிர்தரப்பினர் வராமையினால் அரச தரப்பினர் மீண்டும் சவூதியினை வந்தடைந்துள்ளதுடன் சவூதியின் மீது ஐக்கிய நாடுகள் சபையானது சிறுவர்கள் மீது தாக்குதல்களை மேற்கொண்டமை தொடர்பில் அறிக்கை வெளியிட்டுள்ளதுடன், அதன் கூட்டணி தொடர்பிலும் செயலாளர் நாயகம் கண்டித்துள்ளமையானது இப்பிரச்சினையின் தீர்வு இப்போதைக்கு சந்தேகமாகவே காணப்படுகின்றது.